சினிமா

செல்போனில் பரவும் நயன்தாராவின் ஆபாச படம்

நடிகர் சிம்புவுடன் இணைத்து பேசப்பட்டவர் நடிகை நயன்தாரா. இருவரும் கடந்த சில மாதத்திற்கு முன்பு காதலித்து வந்தனர்.இடையில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் காதல் முறிந்தது. சிம்புவை விமர்சித்து நயன்தாராவும் நயன்தாராவை விமர்சித்து நடிகர் சிம்புவும் காரசாரமாக பேட்டி அளித்து வந்தனர்.

என் நடனத்தை கலைஞர் பாராட்டினார்- அக்ஷயா

கலைஞரின் கதை, வசனத்தில் உருவான உளியின் ஓசை படத்தில் முத்தழகு கேரக்டரில் நடித்திருப்பவர் அக்ஷயா.இவர் ஏற்கனவே கலாபக் காதலன் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உளியின் ஓசையில் வில்லியாகவும் பிறகு மனம்மாறி கதாநாயகனை தீவிரமாக காதலித்து கைப்பிடிப்பவராகவும் நடித்து இருந்தார்.

ஜப்பான் திரைப்பட விழா ரஜினிக்கு அழைப்பு

Rajani_31-08_0.jpgஜப்பானில் நடக்க உள்ள திரைப்பட விழாவில் ரஜினி காந்த் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும் சமயத்தில் ஜப்பானில் குசேலன் திரைப்படமும் வெளியிடப்பட உள்ளது. ரஜினிக்கு ஜப்பானில் கணிசமான ரசிகர்கள் உள்ளனர். தமிழர்கள் உட்பட தென்மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஓரளவு எண்ணிக்கையில் வசிக்கின்றனர். அவர்களில் ரஜினிக்கு அதிக ரசிகர்கள் இருப்பது மட்டுமன்றி, ஜப்பானிய மக்களிடமும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

அமெரிக்காவில் ரஜினியின் குசேலன் தமிழ் படத்திற்கு கட்&அவுட்

தமிழ் நடிகர்களில் முதன்முறையாக ரஜினிகாந்துக்கு அமெரிக்காவில் பிரம்மாண்ட வினயல் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் குசேலன் தெலுங்கில் கதாநாயகடு என்ற பெயரில் வெளியாகிறது.

மனோரமா, பாலசந்தருக்கு டாக்டர் பட்டம்

நடிகை மனோரமா, டைரக்டர் பாலசந்தர் ஆகியோருக்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் நீண்டகாலம் நிலைத்து சாதனை படைத்து வரும் கலைஞர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்க கலிபோர்னியா பல்கலைக்கழகம் முடிவு செய்திருந்தது.

சினிமா தயாரிக்கப் போகிறார் ஷில்பாஷெட்டி

பாலிவுட் பிரபலங்கள் அமீர்கான், ஷாருக்கானைத் தொடர்ந்து, நடிகை ஷில்பா ஷெட்டியும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார்.பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: இனிமேல், ஆண்டு தோறும் இரண்டு திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளேன். நடிகையாக எனக்கு கிடைத்த அனுபவங்கள், திரைப்பட தயாரிப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

உலகம் சுற்றப்போகிறது அமிதாப் பச்சன் குடும்பம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மறக்க முடியாத சுற்றுலா என்ற தலைப்பில், உலகின் முக்கிய நகரங்களில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார். இந்த நிகழ்ச்சியில், புவி வெப்பமயமாவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட உள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், 20 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக, பிரமாண்ட மேடை கலை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

22 பாடல்கள் நிறைந்த "மம்மா மியா' பிரித்தானிய திரையுலகில் வசூல் சாதனை

22 பாடல்களைக் கொண்ட ஆங்கிலத் திரைப்படமான "மம்மா மியா' திரையிடப்பட்ட முதல் வாரத்தில் 5.2 மில்லியன் ஸ்ரேலிங் பவுணை வருமானமாக ஈட்டி பிரித்தானிய திரையுலகில் வசூல் சாதனை படைத்துள்ளது. மெரில் ஸ்றீப், பியர்ஸ் பிரொஸ்னன் மற்றும் கொலின் பிர்க் ஆகியோரின் நடிப்பில் உருவான இத்திரைப்படம் வீரசாகச "ஹான்கொக்' திரைப்படத்தை இரண்டாமிடத்திற்கு தள்ளியுள்ளது.

என் காதலி நயன்தாரா அல்ல: நடிகர் விஷால்

என் காதலி, நயன்தாரா அல்ல. அவர் இனிமேல் என்னுடன் நடிக்கமாட்டார். படப்பிடிப்பின்போது அந்த அளவுக்கு அவரை டார்ச்சர் செய்து இருக்கிறேன் என்று நடிகர் விஷால் கூறினார். வல்லவன் என்ற படத்தில் சிலம்பரசனும், நயன்தாராவும் ஜோடியாக நடித்தார்கள். அதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதும், சில மாதங்களிலேயே அந்த காதல் முறிந்து போனதும் பழைய தகவல்.

உலகின் உயரமான மாடல் அழகி

ஜெர்மனியின் பெர்லின் நகரில் பாஷன் ஆடை திருவிழா நடைபெறுகிறது. இதில் ஜெர்மனியின் டார்ட்கள் நிறுவனத்தின் உள்ளாடையை அணிந்தபடி உயரமான அழகி அவோனா மேடையில் போஸ் கொடுத்த காட்சி. இவரது உயரம் 1.96 மீட்டர். கால்களின் நீளம் 1.34 மீட்டர்.

8 வருடம் காதலித்த கம்ப்யூட்டர் இன்ஜினீயரை மணக்கிறார் நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ்

நடிகர் சிபிராஜ், எட்டு வருடமாக தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்கிறார். நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ். ‘ஸ்டூடண்ட் நம்பர்&1’ என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். பிறகு ‘ஜோர்’, ‘மண்ணின் மைந்தன்’, ‘லீ’ உட்பட பல படங்களில் நடித்தார். இவருக்கும் கடலூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வைத்தியநாதன் என்பவரது மகள் ரேவதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் நூலகம் நடிகா சூர்யா அமைக்கிறார்

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை மற்றும் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி, சிவகுமார் தலைமையில் பிலிம் சேம்பரில் நேற்று நடந்தது. உதவி தொகைகளை வழங்கி சூர்யா பேசியதாவது: எங்கள் வீட்டில் பிறந்த நாள் விழா, குலதெய்வ கோவில் விழா ஆண்டுதோறும் தவறாமல் நடக்கிறது என்று கூற முடியாது. ஆனால் இந்த நிகழ்ச்சி மட்டும் 29 வருடமாக தொடர்ந்து நடந்து வருகிறது.

உலக அழகிக்கான பட்டம் பெற துடிக்கும் அழகிகள்

மிஸ் யூனிவர்ஸ் உலக அழகி போட்டி வியட்நாமின் நகாதராங் நகரில் வருகிற 14-ந்திகதி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள சென்ற தான்சானியா அழகி அமந்தா ஓலி, ஜப்பான் அழகி ஹிரோகோ மிமா, தாய்லாந்து அழகி சுவிந்த்ரா, பெல்ஜியம் அழகி அலிசி பொலிசிக் ஆகியோர் நீச்சல் உடையில் போஸ் கொடுக்கும் காட்சி

நயன்தாரா- விஷால் காதலா?

சிம்புவும் நயன்தாராவும் விருந்தொன்றில் சமீபத்தில் சந்தித்தனர். இதனால் இருவருக்கும் மீண்டும் காதல் துளிர் விட்டதாக பேச்சு பரவியது. ஆனால் இச்சந்திப்பை நயன்தாரா விரும்பவில்லை என்றும் திரிஷா எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி சிம்புவை வரவழைத்ததாகவும் கூறப்பட்டது.

சிம்புவுடன் மீண்டும் இணைத்து நயன்தாரா மார்க்கெட்டை சரிக்க திரிஷா ரகசிய திட்டமா?

நயன்தாரா- சிம்பு சந்திப்பு தமிழ் திரையுலகில் பரபரப்பான பேச்சாக உள்ளது. மீண்டும் காதல் துளிர் விட்டுள்ளதாக சக நடிகர்கள் கணிக்கின்றனர்.ஆனால் இச்சந்திப்பு நயன்தாராவுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்றும் யாரோ திட்டமிட்டு அவர் இருப்பிடம் பற்றி சிம்புவுக்கு சொல்லி வரவழைத்ததாகவும் இன்னொரு தகவல் பரவி வருகிறது. சிம்புவை வரவழைத்தது யார்? இச்சந்திப்பினால் அவருக்கு என்ன லாபம் என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

சிம்பு & நயன்தாரா மீண்டும் காதலா?

இரண்டு வருட பிரிவுக்கு பின்னர் சிம்புவும், நயன்தாராவும் திடீரென்று சந்தித்து மனம் விட்டு பேசினர். சிம்புவும், நயன்தாராவும் கடந்த 2 வருடத்துக்கு முன்பு காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். வல்லவன் படத்தில் சிம்புவுடன் நெருக்கமாக நடித்தார் நயன்தாரா. இதையடுத்து இவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது. திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகள் சுமத்தி பேட்டி அளித்தனர்.

மர்ம யோகியில் கமல் ஜோடியாக ஸ்ரேயா

கமலின் மெகாபட்ஜெட் படம் மர்ம யோகி. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இப்படம் தயாராகிறது. சரித்திர கால படம் என்பதால் உடைகள் போர் பிரமாண்ட அரண்மனைகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கோடிக்கணக்கான பணத்தை இறைத்து அரங்குகள் அமைத்து காட்சிகளை எடுக்கின்றனர். யுத்த காட்சிகள், சுவீட்சர்லாந்தில் படமாக்கப்படுகிறது. ஹாலிவுட் நிபுணர்களை வைத்து போர் காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் பிரமாண்ட படுத்தப்படுகின்றன.

சினிமாத்துறையில் இணையுமுன் நட்சத்திரங்கள் ஆற்றிய தொழில்கள்

சினிமாவில் தலைகாட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு கலைஞரும் திரையுலகில் கால் பதிப்பதற்கு முன்பு ஏதாவது ஒரு தொழில், பணியில் ஈடுபட்டிருப்பார்கள். சினிமாவுக்கு முன் யார் எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
நடிகர்கள் தொழில்
ஜெமினி கணேசன் போட்டோ உதவி பேராசிரியர்
ஸ்ரீகாந்த் அமெரிக்க தூதரக அலுவலக அதிகாரி
ஏவி.மெய்யப்பன் சைக்கிள் கடை

குசேலன்' இளமைக்குக் காரணம் என்ன?: நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

குசேலன்' படத்தின் பாடல் சி.டி.யை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட, நடிகர் ரஜினிகாந்த், படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர். உடன் இயக்குநர்கள் கே. பாலசந்தர், பி. வாசு.

தமிழ் திரையுலகின் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடித்த முதல் படம்

தமிழ் திரையுலகின் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் முதன் முதலில் மின்னிய திரைப்படம் பற்றி விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள், நடிகைகள்

எம்.ஜி.ஆர் சதிலீலாவதி
மனோரமா மாலையிட்ட மங்கை
சிவாஜி பராசக்தி
கோவை சரளா முந்தானை முடிச்சி
ஜெமினிகணேசன் ஒளவையார்
சாவித்ரி பாதாள பைரவி
எஸ்.எஸ்.ஆர் பராசக்தி
பத்மினி கல்பனா
முத்துராமன் அரசிளங்குமரி
சரோஜாதேவி தங்கமலை ரகசியம்
ஏவி.எம்.ராஜன் நானும் ஒரு பெண்

பிரபலமான நடிகர்கள், நடிகைகளின் 100வது திரைப்படம்

திரையுலகத்தை பொறுத்த வரை நடிகராக இருந்தாலும் சரி, நடிகையாக இருந்தாலும் சரி 100 படங்கள் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் அனைவரின் உள்ளங்களிலும் இருக்கும். இப்படி லட்சிய பயணம் மேற்கொண்டு 100 படங்களை நடித்த உங்கள் அபிமான நட்சத்திரத்தில் 100வது படம் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் திரைப்படங்கள்

சிவாஜிகணேசன் நவராத்திரி
எம்.ஜி.ஆர் ஒளிவிளக்கு
ஜெமினி கணேசன் சீதா
ரஜினிகாந்த் ஸ்ரீராகவேந்திரா

சுந்தர் சி.யின் பெருமாள்-சிம்புவின் சிலம்பாட்டம்: பொள்ளாச்சியில் களைகட்டும் சினிமா படப்பிடிப்புகள்

பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் தற்போது தொடர்ந்து தமிழ் சினிமா படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அண்மையில் ரஜினியின் குசேலன், விஜயகாந்தின் எங்கள் ஆசான், விஜய்யின் வில்லு, சுந்தர்.சி-யின் ஐந்தாம் படை என பல படங்களின் சூட்டிங் நடைபெற்று முடிந்துள்ளது.

இதுதவிர மலையாள, தெலுங்கு படங்களின் படப்பிடிப்பும் நடந்தது. தொடர்ந்து பல படங்களின் சூட்டிங் நடைபெறுவதற்காக இடங்களை தேர்வு செய்து வருகின்றனர்.

வஞ்சிக்கோட்டை வாலிபன் பத்மினி-வைஜயந்திமாலாவைப்போல் மீராஜாஸ்மின்-ரீமாசென் போட்டி நடனம்

ஜெமினிகணேசன் நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் பத்மினியும், வைஜயந்திமாலாவும், சாதுர்யம் பேசாதேடீ...என் சலங்கைக்கு பதில் சொல்லடீ என்று போட்டி நடனம் ஆடிய காட்சி, இன்றளவும் ரசிகர்களின் கண்களுக்குள் நிற்கிறது.

இதேபோன்ற ஒரு போட்டி நடன காட்சி, எமகோலா என்ற தெலுங்கு படத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் மீராஜாஸ்மினும், ரீமாசென்னும் போட்டி நடனம் ஆடியிருக்கிறார்கள்.

சைவம் சாப்பிடுவோரில் கவர்ச்சிகரமானவராக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தேர்வு

ஆசியாவிலேயே, சைவம் சாப்பிடுவோரில் கவர்ச்சிகரமானவராக பாலிவுட் நடிகர் அமிதாப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.விலங்குகள் நல உரிமை பாதுகாப்பு அமைப்பு, ஆசியாவில் சைவம் சாப்பிடுவோரில் கவர்ச்சிகரமான நபர்கள் யார் என்பது குறித்து ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆண்களில் பாலிவுட் நடிகர் அமிதாப், ஆசியாவிலேயே கவர்ச்சிகரமானவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடிகை சரோஜா தேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

நடிகை சரோஜா தேவிக்கு திரையுலகின் வாழ்நாள் சாதனையாளர் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர் உள்பட நான்கு பேர் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

Syndicate content